செய்திகள்
கொரோனா பீதி: மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொல்கத்தா நகராட்சி மற்றும் 107 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல்களை நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் தேர்தல் கமிஷன் இன்று தெரிவித்துள்ளது.
அனைத்துக் கட்சி தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் உள்ளாட்சி தேர்தல்களை எப்போது நடத்துவது? என்பது தொடர்பாக இன்னும் 15 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷனர் சவுரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.