செய்திகள்
சோனியா காந்தி

கொரோனா வைரஸ் எதிரொலி -காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2020-03-06 13:54 GMT   |   Update On 2020-03-06 13:54 GMT
கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கி உள்ளது. எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நோய் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான தடுப்பு மருந்துகள், உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயன மந்திரி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
 
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தங்கள் கடமையை திறம்பட நிறைவேற்ற மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News