செய்திகள்
டெல்லி சட்டசபை தேர்தல் - பிப்ரவரி 3, 4ம் தேதிகளில் ராகுல், பிரியங்கா பிரசாரம்
டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 3,4-ம் தேதிகளில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய உள்ளனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும், ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரசும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.