செய்திகள்
கோப்புப் படம்

பஞ்சாப் பள்ளியில் கொடூரம்: 8 வயது சிறுமியை கற்பழித்த பத்தாம் வகுப்பு மாணவன்

Published On 2019-12-16 11:11 GMT   |   Update On 2019-12-16 11:11 GMT
பஞ்சாப் மாநில தனியார் பள்ளியில், எட்டு வயது சிறுமியை பத்தாம் வகுப்பு மாணவன் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்:

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பீஸ் நகரில் பிரபல தனியார் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமி, கடந்த 13ம் தேதி பள்ளியில்  இடைவிடாமல் அழுதுகொண்டிருப்பதாக பெற்றோருக்கு பள்ளி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் சிறுமியின் தந்தை பள்ளிக்கு வந்து அவரை வீட்டுக்கு  அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு சென்ற சிறுமி, பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதையும், உடல் முழுவதும் கடுமையான வலியை உணர்வதாகவும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து தங்களது மகள் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என உற்றார் உறவினர் மற்றும் பொதுமக்களுடன் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அந்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு அமிர்தசரஸ் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். விசாரணை முடிந்து அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் பள்ளி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அக்குழந்தையின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News