செய்திகள்
ப.சிதம்பரம்

திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

Published On 2019-11-22 06:01 GMT   |   Update On 2019-11-22 10:27 GMT
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர்.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்ற நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் இன்றும் நாளையும் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று, ப.சிதம்பரத்திடம் விசாரணையைத் தொடங்கினர். 4 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. 
Tags:    

Similar News