செய்திகள்
பிரதமர் மோடி

அரியானா முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்ற மனோகர் லால் கட்டாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2019-10-27 11:56 GMT   |   Update On 2019-10-27 11:56 GMT
அரியானா முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்று உள்ள மனோகர் லால் கட்டாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அரியானா மாநில முதல்-மந்திரியாக மனோகர் லால் கட்டார், துணை முதல்-மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், அரியானா மாநில முதல்-மந்திரியாக பதவியேற்று உள்ள மனோகர் லால் கட்டார், மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்று உள்ள துஷ்யந்த் சவுதாலா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News