செய்திகள்
அபிநந்தன்

அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்று- விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்

Published On 2019-10-08 02:20 GMT   |   Update On 2019-10-08 02:20 GMT
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்றிதழை விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்.
புதுடெல்லி :

கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன.

27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இந்த வீர தீரச்செயல்களுக்காக அபிநந்தனின் படைப்பிரிவுக்கு (51-வது படைப்பிரிவு) பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இன்று (8-ந் தேதி) நடக்கிற விழாவின்போது இந்த பாராட்டு சான்றிதழை அபிநந்தன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சதி‌‌ஷ் பவாரிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்குகிறார்.
Tags:    

Similar News