செய்திகள்
பிணமாக கிடந்த ரமேஷ், மோனிஷா.

எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்த கள்ளக்காதல் ஜோடி

Published On 2019-09-30 05:27 GMT   |   Update On 2019-09-30 05:27 GMT
எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதல் ஜோடி பிணமாக கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இங்குள்ள மேல்தளத்தில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அங்கு வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்பதால் அவர்களது உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரும், இளம்பெண்ணும் அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

இறந்து கிடந்த வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 33). இவர் செல்போன் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இளம்பெண்ணின் பெயர் மோனிஷா (25). அவருக்கு திருமணமாகி சதீஷ் என்ற கணவரும், குழந்தைகளும் உள்ளனர்.

ரமேஷ் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலும், மோனிஷா கணவருடன் கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். சதீஷ் சினிமா எடிட்டிங் தொடர்பான ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார்.

ரமேசுக்கும், மோனிஷாவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எதிர்ப்பு காரணமாக அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News