செய்திகள்
வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள்?: மத்திய மந்திரிக்கு பிரியங்கா கேள்வி
கடந்த 5 ஆண்டுகளில் வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள்? சில புள்ளிவிவரங்களை தாருங்கள் என்று மத்திய மந்திரி சந்தோஷ் குமாரிடம் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி :
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வார், “வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆனால், வட இந்தியாவில் தகுதியான நபர்களுக்குத்தான் பஞ்சமாக உள்ளது” என்று சமீபத்தில் கூறினார். அதற்கு வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. வட இந்தியர்களை கங்க்வார் அவமதித்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.
நேற்று மீண்டும் ஒரு ‘டுவிட்டர்’ பதிவை பிரியங்கா வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீங்கள் பெரிய விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே, சில புள்ளிவிவரங்களை தாருங்கள். கடந்த 5 ஆண்டுகளிலும், இப்போது 100 நாட்களிலும் எத்தனை வட இந்தியர்களுக்கு வேலை கொடுத்தீர்கள்? ‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தின்கீழ் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது?
ஆனால், எத்தனை பேர் வேலை இழந்தனர் என்ற புள்ளிவிவரம், மக்களிடம் இருப்பதை மறக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வார், “வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆனால், வட இந்தியாவில் தகுதியான நபர்களுக்குத்தான் பஞ்சமாக உள்ளது” என்று சமீபத்தில் கூறினார். அதற்கு வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. வட இந்தியர்களை கங்க்வார் அவமதித்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.
நேற்று மீண்டும் ஒரு ‘டுவிட்டர்’ பதிவை பிரியங்கா வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீங்கள் பெரிய விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே, சில புள்ளிவிவரங்களை தாருங்கள். கடந்த 5 ஆண்டுகளிலும், இப்போது 100 நாட்களிலும் எத்தனை வட இந்தியர்களுக்கு வேலை கொடுத்தீர்கள்? ‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தின்கீழ் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது?
ஆனால், எத்தனை பேர் வேலை இழந்தனர் என்ற புள்ளிவிவரம், மக்களிடம் இருப்பதை மறக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.