மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் நிறைவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த உற்சாகத்துடனும், பிரமாண்டமான முறையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்ந்து 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு 10 நாட்கள் வரை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 11-வது நாளில் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு விழா நடைபெறுகிறது.
மும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் கடற்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். மும்பை முழுவதும் 5000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் விநாயகர் ஊர்வலம் கண்காணிக்கப்படுகிறது.