செய்திகள்
ராம் ஜெத்மலானி மறைவுக்கு சோனியா, மன்மோகன் சிங் இரங்கல்
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராம் ஜெத்மலானியின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானியின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மத்திய முன்னாள் மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராம் ஜெத்மலானியின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானியின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.