செய்திகள்
கத்தியுடன் நுழைந்த வாலிபரை மடக்கிய போலீசார்

டெல்லியில் பாராளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த நபர் கைது

Published On 2019-09-02 06:13 GMT   |   Update On 2019-09-02 06:13 GMT
தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற வளாகத்தில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கையில் கத்தி வைத்திருந்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த நபரை பாராளுமன்ற காவல் நிலைய வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News