செய்திகள்
சொமாட்டோ உணவை கேன்சல் செய்த நபருக்கு நோட்டீஸ்
சொமாட்டோ வாடிக்கையாளர் ஒருவர், மதத்தை காரணமாக கூறி உணவை கேன்சல் செய்திருந்தார். அந்த நபருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை பார்ப்போம்.
ஜாபல்பூர்:
மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.
எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போதுதான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.
இந்த பதிவிற்கு சொமாட்டோ நிறுவனம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சொமாட்டோ நிறுவனத்துக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மதம் காரணமாக உணவை கேன்சல் செய்தேன் என கூறிய ஜாபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா என்பவருக்கு அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தாசில்தார் முன் அமித் சுக்லா ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.
எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போதுதான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.
எனது உணவிற்கு இந்து அல்லாத ஒருவரை டெலிவரி பாயாக அனுப்பியுள்ளனர். வேறு ஒருவரை மாற்ற முடியாது என்றும் கூறினர். மேலும் டெலிவரிக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கூறினர். எனவே, எனது ஆர்டரை கேன்சல் செய்து, அந்த பணம் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டேன்’ என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு சொமாட்டோ நிறுவனம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சொமாட்டோ நிறுவனத்துக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மதம் காரணமாக உணவை கேன்சல் செய்தேன் என கூறிய ஜாபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா என்பவருக்கு அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தாசில்தார் முன் அமித் சுக்லா ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.