செய்திகள்
பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை நிறுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிளை நதியாக பெண்ணையாறு உள்ளது.
இந்த ஆறு ஹாசன், மைசூரு, பாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பயணித்து தமிழகத்தை வந்தடைகிறது.
இந்த நிலையில் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.