செய்திகள்
பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

பாஜக உறுப்பினர் சேர்க்கையை வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தார் மோடி

Published On 2019-07-06 08:00 GMT   |   Update On 2019-07-06 08:22 GMT
பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, வாரணாசியில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
வாரணாசி:

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்துகின்றனர்.

அவ்வகையில், வாரணாசியில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் பேசிய மோடி, மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனவும், அதற்கான பாதையை பட்ஜெட்டில் காட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 
Tags:    

Similar News