search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varanasi"

    • காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
    • இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், "நமது சோகமான வாழ்க்கை, நமது பயம், நமது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை கொண்டாடுவதுதான் மோடிஜியின் நோக்கம். ஏனென்றால், நம் இந்தியா இப்போது அநீதியின் காலத்தை நோக்கி மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் நமது வளர்ச்சி மற்றும் நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்தான் நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" ஏன்னு ரன்வீர் சிங் பேசுகிறார்.

    இந்நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் இது டீப்பேக் AI தொழிற்நுட்பத்தின் கீழ் உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிகை க்ரிதி சனோனுடன் வாரணாசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தார். அதன் பின்பு அந்த ஆன்மீக அனுபவங்களை அவர் ANI செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    அந்த அசல் வீடியோவில், "உத்தரபிரதேசத்தின் வாரணாசி, காசி கோவிலில் தனது அனுபவம் மற்றும் அந்த நகரத்தில் பிரதமர் மோடி கொண்டு வந்த வளர்ச்சி குறித்து ரன்வீர் சிங் பேசுகிறார்.

    அந்த வீடியோ தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக, அமீர் கான் கூட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறும் டீப்பேக் AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த வீடியோ போலியானது என அமீர் கான் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

    பல வருடங்களுக்கு அவர் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் இருந்து இந்த டீப்பேக் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார்.
    • மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர்.

    வாரணாசி:

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 3-வது முறையாக அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ள அவர் இந்த தடவை சரித்திர சாதனையுடன் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முதலாக அந்த தொகுதியில் போட்டியிட்டபோது மொத்தம் பதிவான வாக்குகளில் 56 சதவீத வாக்குகளை பெற்றார். 2019-ம் ஆண்டு 2-வது முறையாக போட்டியிட்டபோது 63 சதவீத வாக்குகளை பெற்றார்.

    இந்த தடவை 75 முதல் 80 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக அவர் தனி குழு ஒன்றை வாரணாசி தொகுதியில் களம் இறக்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

    பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று 17 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் மேலிடம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.

    இவர் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவார். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் இவர்தான் மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டார். தற்போது 3-வது முறையாக மீண்டும் அஜராய் மோடிக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்.

    வாரணாசி தொகுதி 1991-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் அசைக்க முடியாத கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பிரதமர் மோடி அந்த தொகுதிக்கு சென்றபிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவு பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி உறுதி என்பது அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு 2-வது இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலின்போது மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் சுமார் 3.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பெற்றார்.

    காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் சுமார் 75 ஆயிரம் வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஸ்டாலின்யாதவ் 18 சதவீத வாக்குகளுடன் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக வந்து 2-வது இடத்தை பிடித்தார். அப்போதும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 14 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி சார்பில் அஜய்ராய் களம் இறங்கி இருப்பதால் அவருக்கு 2-வது இடம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. என்றாலும் அஜய்ராயால் எவ்வளவு வாக்குகள் வாங்க முடியும் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்த இருக்கும் அஜய்ராய் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்தவர். பிறகு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்து அரசியலில் ஈடுபட்டார். 1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 3 தடவை அவர் உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார்.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜ.க. மேலிடம் கொடுக்கவில்லை. இதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து மூத்த தலைவர்களில் ஒருவராக மாறினார்.

    நாளடைவில் அந்த கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்வானார். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அவர் 3-வது முறையாக மோடியை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • உ.பி.யின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார்.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று முதல் முதலாக அங்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதன்பிறகு பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்துக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் வரை அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். ஆலயத்துக்குச் சென்ற பிறகு காசி விசுவநாதருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். நேற்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்கினார்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். உத்தர பிரதேச மாநிலத்துக்கான ரூ.42,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார்.

    மேலும், 15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாடடினார். இந்த விமான நிலையங்கள் ரூ.9,800 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. அதுபோல 12 புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 70 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    • உத்தர பிரதேச இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
    • சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் தூதராக செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர் மோடி.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சந்த் ரவிதாசின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசியில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.

    குடும்ப அரசியல் மற்றும் ஊழல் காரணமாக உத்தர பிரதேச மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியது. காங்கிரசின் இளவரசர் காசி மற்றும் உத்தர பிரதேச இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது? அவர்கள் உ.பி. இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
    • இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை தாக்கி, அதன் உறுப்பினர்கள் சாதிவெறியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.

    அவர் தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில்," சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், உங்கள் அனைவரையும் அவரது பிறந்த இடத்திற்கு வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகள். வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.

    இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றார்.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.

    சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி யாத்திரை வரும் போது அதில் நான் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.

    • மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்.
    • வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை நிறுத்தவும் மென்மொழிவு.

    இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ஜனவரி மாதத்திற்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    மேலும் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் ஆகிய கருத்துகளை முன்மொழிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு பதிலடியாக மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் அக்னிமித்ரா பால், தைரியம் இருந்தால் நீங்கள் நிற்கலாமே எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பா.ஜனதா தலைவர் அக்னிமித்ரா பால் கூறியதாவது:-

    இடங்கள் பங்கீட்டிற்கு முன், பிரியங்கா காந்திக்குப் பதிலாக மம்தா பானர்ஜி மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பேட்டியிட தைரியம் இருந்தால், அதை மம்தா செய்ய வேண்டும். நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்கள். சரிதானே? நம்முடைய முதல்வர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டும். அவருக்கு எவ்வளவு தைரியம் என்று பார்ப்போம்.

    இவ்வாறு அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார்.

     2019 தேர்தலின்போது வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக வதந்திகள் வெளியாகின. இறுதியில் அவருக்குப் பதிலாக அஜய் ராய் என்பவர் நிறுத்தப்பட்டார்.

    • சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன்.
    • வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

    வாரணாசி தொகுதியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை சிவபெருமானுக்கே அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார்.

    "மகாதேவ் நகரில் அமையவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த மைதானத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற முடியும். மேலும் இது பூர்வான்ச்சல் பகுதியில் புகழ்பெற்ற இடமாக மாறும். விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்புகள் உருவாகும் போது, அது இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

     

    புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா மற்றும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த மைதானம் அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்த மாநில அரசு ரூ. 121 கோடியை செலவிட்டு இருப்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த மைதானத்திற்கான கட்டுமானத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 330 கோடி செலவிடப்பட இருக்கிறது. இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பேர் அமர முடியும்.

     

    மைதானத்தை அழகுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே உடுக்கை, வில்வம் இலைகள் போன்ற வடிவம் கொண்ட ரூஃப் கவர்கள் மற்றும் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. பார்வையாளர்களின் அரங்கம் வாரணாசி நதியோரம் இருக்கும் படிக்கட்டுகளை போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த மைதானம் 2025 டிசம்பர் மாதம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    • பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்.) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கார்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிபட்டு விளக்குகளை ஏற்றுவர்.

    அந்த மாதத்தையொட்டி இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் உதவும்.

    ஒரு மாத கால நிகழ்ச்சியாக 'காசி தமிழ்ச் சங்கமம்' வாராணசியில் (காசி) நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள காசி தமிழ்ச் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநர்கள் அறிஞர்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

    இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி தமிழ்ச்சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 12 குழுக்களில் தலா 210 பேர் பங்கேற்கிறார்கள்.

    கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள் என்றனர்.

    இந்தி திணிப்பு குறித்த தமிழக முதல்வரின் கடிதம் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளையும் தேசிய மொழிகள் என்றும், இந்த மொழிகளில் பொறியியல் உள்ள தொழில் நுட்பப் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா தொழில் நுட்பப் படிப்புகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தாய்மொழி தான்இணைப்பு மொழி (பயிற்று மொழி) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் இந்திதான் பயிற்று மொழி. அதேபோன்று, மற்ற பகுதிகளில் அந்தந்த தாய்மொழிகள் தான் பயிற்று மொழியாக இருக்கும் என்றுதான் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்" என்றார்.

    • ரூ.590 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார்.
    • அகில இந்திய கல்வி கூட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி ஜூலை 7-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார். பிற்பகல் 2 மணி அளவில், வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திறன் உள்ள அக்சய பாத்திர மதிய உணவு சமையல் கூடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ள அகில இந்திய கல்வி கூட்டத்தைத் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4 மணிக்கு சிக்ராவில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் ரூ. 590 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார். மேலும் ரூ. 1800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    • பிரதமர் மோடியின் சொந்த தொகுதி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி.
    • வரும் 7-ம் தேதி பிரதமர் மோடி அங்கு சென்று ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வரும் 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 1 லட்சம் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவை சமைக்க முடியும்.

    இதேபோல், ருத்ராக்சம் பகுதியில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் அகில பாரதீய ஷிக்சா சமகம் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

    இதையடுத்து, சிக்ராவில் உள்ள சம்பூர்னானந்த ஸ்டேடியம் செல்லும் பிரதமர் மோடி, ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளது.

    ×