search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசி மற்றும் உ.பி. இளைஞர்கள் அடிமைகளா?: ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி
    X

    காசி மற்றும் உ.பி. இளைஞர்கள் அடிமைகளா?: ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி

    • உத்தர பிரதேச இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
    • சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் தூதராக செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர் மோடி.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சந்த் ரவிதாசின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசியில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.

    குடும்ப அரசியல் மற்றும் ஊழல் காரணமாக உத்தர பிரதேச மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியது. காங்கிரசின் இளவரசர் காசி மற்றும் உத்தர பிரதேச இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது? அவர்கள் உ.பி. இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×