செய்திகள்

மகாராஷ்டிர சட்டமன்ற வாசலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-18 08:07 GMT   |   Update On 2019-06-18 08:07 GMT
மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சட்டமன்ற வாசலில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக இன்றும் சட்டமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவான், பாலசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.



மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். எனவே, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
Tags:    

Similar News