செய்திகள்
கொல்கத்தா டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு- எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டம்
கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அண்மையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினார். 4 மணிநேரத்தில் போராட்டத்தை கைவிடாவிடில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறும், தலையில் பேண்டேஜ் அணிந்தவாறும் பணியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அண்மையில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினார். 4 மணிநேரத்தில் போராட்டத்தை கைவிடாவிடில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறும், தலையில் பேண்டேஜ் அணிந்தவாறும் பணியில் ஈடுபட்டனர்.