செய்திகள்

ராஜஸ்தானில் பரிதாபம்- திருமணமான ஒரே மாதத்தில் மின்சாரம் தாக்கி பலியான விவசாயி

Published On 2019-06-06 11:30 GMT   |   Update On 2019-06-06 11:30 GMT
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில், திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெய்ப்பூர்: 

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ராம்சிசார் பெட்வால்வா கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அந்த விவசாயிக்கு கடந்த மாதம் தான் திருமணம் ஆனது. மின்வாரியத்தின் அலட்சியத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறி  விவசாயியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விவசாயியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.       
Tags:    

Similar News