செய்திகள்

கா‌‌ஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2019-05-30 20:24 GMT   |   Update On 2019-05-30 20:24 GMT
கா‌‌ஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

கா‌‌ஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்களின் பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
Tags:    

Similar News