செய்திகள்

குடும்பத்துடன் பிக்னிக் சென்றபோது நீரில் மூழ்கி விபத்து - 3 பேர் பலி

Published On 2019-05-20 04:26 GMT   |   Update On 2019-05-20 04:26 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு குடும்பத்துடன் பிக்னிக் சென்றபோது அணையில் இருந்த நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பூனே:

குழந்தைகளுக்கான விடுமுறை நாட்களை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் கெத் பகுதியைச் சேர்ந்த கெய்குவாட் என்பவரின் குடும்பத்தினர், நேற்று உறவினர்களுடன் பிக்னிக் சென்றனர். இவர்கள் மும்பையில் இருந்து  தலேகானுக்கு அருகில் உள்ள ஜாதவ் வாடி அணைக்கு சென்றுள்ளனர்.

அணையில் நீர்வரத்து வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, கோல்சே என்பவர் அந்த பக்கமாக நடந்துச் சென்றுள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்து நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற குடும்பத்தினரும் முயன்றுள்ளனர். இதில் சிறுவன் உட்பட மேலும் 2 பேர் நீரில் மூழ்கினர்.



இந்நிலையில் அருகே இருந்த ஒரு பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது குடும்பத்தினர் நீரில் மூழ்குவது குறித்து உடன் இருந்தவர்கள் சிலர் தகவல் கொடுக்கவே, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதில் நீரில் மூழ்கியவர்களுள்  3 பேர் மீட்பு படையினரால் காப்பாற்றப்பட்டனர். ஆனால், பிரஷில் யாதவ்(7), அனில் கோல்சே(58), பிரிதேஷ் அகாலி(32) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News