செய்திகள்
பிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா காந்தி
பிரதமரை வரவேற்பதற்காக குடிநீரை வைத்து சாலையை கழுவியதை வன்மையாக கண்டித்த பிரியங்கா காந்தி, மோடி இந்த நாட்டின் பிரதமர் அல்ல, அவர் பிரதம பிரசார மந்திரி என குறிப்பிட்டுள்ளார். #PriyankaGandhi #Modi
லக்னோ:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளில் இன்று பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்த பன்டேல்கன்ட் பகுதியில் உள்ள ஆண், பெண், பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் இங்கு தவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் டெல்லியில் இருந்துவரும் மகாராஜாவின் வருகைக்காக மக்களுக்கு பயன்படும் குடிநீரை இப்படி பாஜகவினர் வீணடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என குறிப்பிட்டார். #Modi #PradhanPracharMantri #PriyankaGandhi
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளில் இன்று பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
பன்டா நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா, ‘மோடி நாளை இங்கு வருவதால் மக்கள் பயன்படுத்த வேண்டிய பொது குடிநீரை வைத்து இந்த நாட்டின் பிரதம பிரசார மந்திரிக்காக பாஜகவினர் சாலைகளை கழுவி வருகின்றனர்.
இந்த பன்டேல்கன்ட் பகுதியில் உள்ள ஆண், பெண், பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் இங்கு தவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் டெல்லியில் இருந்துவரும் மகாராஜாவின் வருகைக்காக மக்களுக்கு பயன்படும் குடிநீரை இப்படி பாஜகவினர் வீணடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என குறிப்பிட்டார். #Modi #PradhanPracharMantri #PriyankaGandhi