செய்திகள்

பீகாரில் லாரி-ஆட்டோ மோதல்: 4 பேர் பலி

Published On 2019-03-25 06:05 GMT   |   Update On 2019-03-25 06:05 GMT
பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். #BiharAccident
பாட்னா:

பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார்ஹ் பாக்தியார்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோவின் மீது சற்றும் எதிர்பாராத விதமாக மோதியது.

இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். #BiharAccident
Tags:    

Similar News