செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியை மர்ம நபர்கள் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #WomanSPOshotdead
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில போலீசில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குஷ்புவை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் குஷ்பு படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #WomanSPOshotdead