செய்திகள்

மேகதாது அணை குறித்து பேசினேன்: பிரதமர் மோடியை சந்தித்த பின் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

Published On 2018-12-27 12:23 GMT   |   Update On 2018-12-27 13:13 GMT
மேகதாது பிரச்சனையில் இரு மாநில அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கானது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன். இத்திட்டத்தை இரு அரசுகள், மக்களின் நம்பிக்கை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News