செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். #JammuKashmir #LeTmilitantArrest
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் போலீசார் இன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, கங்கான் பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுபேர் பட்டை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் காஜிகண்ட் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பிடிபட்ட பயங்கரவாதியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #LeTmilitantArrest