செய்திகள்

கேரளாவில் ஒரு மாதத்தில் 589 கற்பழிப்பு புகார்

Published On 2018-12-15 05:39 GMT   |   Update On 2018-12-15 05:39 GMT
கேரளாவில் ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான வழக்குகளில் மூன்றில் ஒரு வழக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காக பதிவாகி உள்ளது. போஸ்கோ வழக்குகளும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 215 வழக்குகள் பதிவாகி இருந்தது. இது 2017-ம் ஆண்டு 1101 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மட்டும் கேரளாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் கற்பழிப்பு புகார்கள் என 999 வழக்குகள் பதிவாகி உள்ளது.

இதிலும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 589 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை போல பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு பெண்கள் வன்கொடுமை தொடர்பாக 14254 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 1987 வழக்குகள் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் வரை 11302 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில், 1645 கற்பழிப்பு வழக்குகள் ஆகும். #tamilnews
Tags:    

Similar News