செய்திகள்
லட்டு வழங்க தயார் நிலையில் உள்ள அட்டை பெட்டிகள்.

திருப்பதியில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம்

Published On 2018-11-30 10:27 GMT   |   Update On 2018-11-30 10:27 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் முறைகேடுகளை தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு வினியோகம் செய்யப்படுகிறது. #Tirupati #PlasticBan
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகம் மற்றும் மலையில் கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்தது.

திருமலையில் உள்ள கடைகளில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படும் என கூறினர்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் போது 26 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், லட்டு முறைகேடுகளை தவிர்க்கவும் திருப்பதி தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

லட்டு வாங்க பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அட்டைபெட்டிகள் தயார் செய்யபட்டுள்ளது. அதில் 2 லட்டு, 4 லட்டு, 5 லட்டுகள் வைக்கும் அளவிற்கு 3 வகையான அட்டை பெட்டிகள் 4 கலர்களில் தயார் செய்யபட்டுள்ளன.

மொத்தம் 1லட்சம் அட்டை பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை முதல் பக்கதர்களுக்கு அட்டை பெட்டிகளில் லட்டு வினியோகம் செய்யபட்டு வருகிறது. #Tirupati #PlasticBan

Tags:    

Similar News