செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்

Published On 2018-11-21 07:54 GMT   |   Update On 2018-11-21 07:54 GMT
உத்தரபிரதேசத்தில் சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
முசாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் பசாயத் கிராமத்தில் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அங்கு அதே ஊரைச் சேர்ந்த வீரேந்திர குமார் (26) என்பவர் வந்தார். பின்னர் அவளை மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தார்.

எனவே அவரை கைது செய்த போலீசார் சிறப்பு போஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சுத்சிங் குற்றம் சாட்டப்பட்ட வீரேந்திரகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். அதில் பாதி தொகையை கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News