செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் மத நிகழ்ச்சியில் குண்டுவீச்சு தாக்குதல் - 3 பேர் பலி
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்தில் இன்று மத நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். #3deadblast #NirankariBhawan #Amritsarblast
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #3deadblast #NirankariBhawan #Amritsarblast