செய்திகள்

மத்தியபிரதேச தேர்தல்: 35 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் இல்லை - பாஜக அதிரடி

Published On 2018-11-03 09:46 GMT   |   Update On 2018-11-03 09:57 GMT
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 35 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. #BJP #MadhyaPradeshelection

புதுடெல்லி:

மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

230 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

2003-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா மத்தியபிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 35 பேருக்கு டிக்கெட் கொடுக்காமல் பா.ஜனதா அதிரடி முடிவை எடுத்தது.

ஹர்ஷ்சிங், கவுரிசங்கர் உள்ளிட்ட 3 மந்திரிகளுக்கும் கட்சி மேலிடம் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் நீக்கப்பட்ட 2 மந்திரிகளுக்கு பதிலாக அவர்களது மகன்களுக்கு சீட் வழங்கி உள்ளது.

பா.ஜனதா எம்.பி.க்களாக இருக்கும் மனோகர்சிங் உந்த்வால், நாகேந்திரசிங் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

2-வது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் சில எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்படுவார்கள் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #BJP #MadhyaPradeshelection

Tags:    

Similar News