செய்திகள்

ஒடிசாவில் உயரழுத்த மின்சார கம்பியில் சிக்கி 7 யானைகள் பலி

Published On 2018-10-27 09:46 GMT   |   Update On 2018-10-27 09:46 GMT
ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் தாழ்வாக தொங்கிய உயரழுத்த மின்சார கம்பியில் சிக்கிய 7 யானைகள் உயிரிழந்தன. #Sevenelephants #Dead
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் உள்ள காமலங்கா கிராமம் வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக 11 கிலோவாட் திறன் கொண்ட மின்சார கம்பிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறன்றன. மிகவும் உயரம் குறைந்த கம்பங்கள் வழியாக மின்சார கம்பிகளை ஊழியர்கள் பொருத்தியுள்ளதாக கூறிய கிராம மக்கள் உயரமான கம்பங்களை பொருத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு இங்குள்ள நெல் வயல் வழியாக இரைதேடிச் சென்ற ஒரு யானை கூட்டத்தை சேர்ந்த 7 யானைகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.  #Sevenelephants #Dead

Tags:    

Similar News