செய்திகள்
மும்பை விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது
பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். #MumbaiFlight #WomanMolests
மும்பை:
பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பைக்கு பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் விமானத்தினுள் விளக்குகள் அணைக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஒரு வாலிபர், தன் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்த வாலிபர் தன்னை வேண்டுமென்றே தொடுவதை கவனித்த அந்த பெண் கூச்சலிட்டு, பணிப்பெண்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
உடனே அங்கு வந்த பணிப்பெண்கள், பாதிக்கப்பட்ட பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றினர். பின்னர் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், ஒன்றுமே நடக்காதது போல் இறங்கிய அந்த வாலிபரை, சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்து, சாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மும்பையைச் சேர்ந்த சந்திர திரிபாதி (வயது 31) என்பதும் தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். #MumbaiFlight #WomanMolests
பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பைக்கு பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் விமானத்தினுள் விளக்குகள் அணைக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஒரு வாலிபர், தன் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்த வாலிபர் தன்னை வேண்டுமென்றே தொடுவதை கவனித்த அந்த பெண் கூச்சலிட்டு, பணிப்பெண்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
உடனே அங்கு வந்த பணிப்பெண்கள், பாதிக்கப்பட்ட பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றினர். பின்னர் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், ஒன்றுமே நடக்காதது போல் இறங்கிய அந்த வாலிபரை, சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்து, சாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மும்பையைச் சேர்ந்த சந்திர திரிபாதி (வயது 31) என்பதும் தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். #MumbaiFlight #WomanMolests