செய்திகள்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் பலி

Published On 2018-10-21 07:40 GMT   |   Update On 2018-10-21 14:25 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். #Threecivilianskilled #southKashmirblast
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.



இந்த தகவல் அறிந்து அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் லாரூவில் திரண்டனர். அப்போது அங்கு திடீரென்று மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

காயமடைந்த பலர் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இச்சம்பவத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பபட்டது. இந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி 6 பேர் உயிரிழந்துள்ளனர். #Threecivilianskilled  #southKashmirblast

Tags:    

Similar News