செய்திகள்

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம் - விமானப்படை அதிகாரி தொடையில் பாய்ந்த குண்டு

Published On 2018-09-26 21:07 GMT   |   Update On 2018-09-26 21:07 GMT
விமானப்படை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்த குண்டு அவரது தொடையில் பாய்ந்தது. #IAF #Bullet
புதுடெல்லி:

இந்திய விமானப்படையில் துணை மார்ஷலாக பணிபுரிந்த் வரும் அதிகாரி எஸ்.பி.தியோ. இவர் நேற்று தனது சர்வீஸ் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையில் கை பட்டதால் தோட்டா குண்டு வெடித்தது. அந்த குண்டு அவரது தொடையில் பாய்ந்ததல் அவர் அலறி துடித்தார்.



இதில் படுகாயம் அடைந்த தியோ, டெல்லியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது நிலைமை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #IAF #Bullet
Tags:    

Similar News