செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்னூல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

Published On 2018-09-05 06:23 GMT   |   Update On 2018-09-05 06:23 GMT
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ந்தேதி ஆந்திர மாநிலம் கர்னூலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். #RahulGandhi
அமராவதி:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 18-ந்தேதி ஆந்திர மாநிலம் கர்னூலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால் போராட்டம் நடத்தி  வருகிறார்கள்.

இச்சூழ்நிலையில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவது முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல்காந்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் முதற்கட்டமாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்படி 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அறிவிப்பார் என்று தெரிகிறது.

மேலும் பொதுக்கூட்டத்தின்போது மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். #RahulGandhi #Congress
Tags:    

Similar News