செய்திகள்

காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நிர்மலா சீதாராமன் திடீர் ஆய்வு

Published On 2018-09-02 11:03 GMT   |   Update On 2018-09-02 11:03 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள பல்பிர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். #NirmalaSitharaman #Balbirforwardpost
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,  குப்வாரா மாவட்டத்தில் உள்ள பல்பிர் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள இந்திய படைகளின் கண்காணிப்பு முன்னிலை முகாமை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார்.

ராணுவ தளபதி பிபின் ரவத்துடன் ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் இங்கு வந்தடைந்த நிர்மலா சீதாராமன் அங்கு கடைமையாற்றும் நமது வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த இடத்துக்கு பாதுகாப்பு துறை மந்திரி ஒருவர் வந்தது இதுவே முதன்முறை என்று ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. #NirmalaSitharaman #Balbirforwardpost 
Tags:    

Similar News