செய்திகள்

சிப்ரஸ், பல்கேரியா நாடுகளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒருவார சுற்றுப்பயணம்

Published On 2018-08-31 14:30 GMT   |   Update On 2018-08-31 14:30 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு ஒரு வாரம் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி :

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

தனது பயணத்தின் முதல் நாடாக வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சிப்ரஸ் பயணம் செய்யும் ராம் நாத் கோவிந்த், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பகேரியா செல்லும் அவர், இந்த பயணத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

தனது பயணத்தின் மூன்றாம் கட்டமாக 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு அவர் பயணம் செய்கிறார்.
Tags:    

Similar News