செய்திகள்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஆக. 28ம் தேதி கேரளா செல்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Published On 2018-08-26 15:54 GMT   |   Update On 2018-08-26 15:54 GMT
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #KeralaRains #KeralaFloods #RahulGandhi
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28-ம் தேதி பார்வையிட உள்ளார். வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி பகுதிகளை 28ம் தேதி பார்வையிடுகிறார்.

மேலும்,  29-ம் தேதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தை பார்வையிட உள்ளார்  என தெரிவித்தனர். #KeralaRains #KeralaFloods #RahulGandhi
Tags:    

Similar News