செய்திகள்

ஐயப்பன் அருளால் மீண்டும் கர்நாடக முதல்வர் ஆனேன் - கேரளாவில் குமாரசாமி நெகிழ்ச்சி

Published On 2018-07-28 12:51 GMT   |   Update On 2018-07-28 12:51 GMT
தீவிர ஐயப்ப பக்தனான தனக்கு ஐயப்பன் அருளினால் மீண்டும் முதல்வர் பதவி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #HDKumaraswamy
திருவனந்தபுரம் :

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றதை சிறப்பிக்கும் விதமாக கேரள மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஐயப்பனின் அருளினால் தான் மீண்டும் முதல்வரானதாக தெரிவித்துள்ளார். 

கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் உடன் சபரிமலைக்கு சென்ற தன் முந்தைய சபரிமலை பயணங்களை நினைவு கூர்ந்த அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும் ஐயப்பன் அருளினால் 2006-ம் ஆண்டே தாம் முதல்வரானதாகவும் கூறினார்.

மேலும், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாமலேயே தற்போது மீண்டும் கர்நாடக முதல்வராகியிருப்பதற்கு ஐயப்பன் அருள் தான் முக்கிய காரணம் என குமாரசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #HDKumaraswamy 
Tags:    

Similar News