செய்திகள்

சண்டிகரில் 40 கொடூரர்களால் 4 நாட்கள் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

Published On 2018-07-20 11:43 GMT   |   Update On 2018-07-20 11:43 GMT
சண்டிகர் மாவட்டத்தில் வேலை தேடி சென்ற 22 வயது இளம்பெண்ணை 40 பேர் கற்பழித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. #Chandigarh
சண்டிகர்:

அரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியில் தனது கணவருடன் வசிக்கும் 22 வயது பெண், கணவரின் நண்பர் வேலை வாங்கி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி, சண்டிகரில் உள்ள மோர்னி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் ஒரு சொகுசு பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டு, 40 கொடூரர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார். சுமார் 4 நாட்கள் அவர் அந்த இடத்தில் அடைத்து வைத்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சொகுசு வீட்டில் பணிபுரியும் 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chandigarh
Tags:    

Similar News