செய்திகள்

கர்நாடகாவில் செல்ஃபி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் விழுந்து இரு இளைஞர்கள் பலி

Published On 2018-07-16 14:25 GMT   |   Update On 2018-07-16 14:25 GMT
கர்நாடக மாநிலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் அருவியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Karnataka #selfieKills
பெங்களூரு:

இளைஞர்களின் செல்ஃபி மோகம் மிகவும் அதிகரித்து உயிர் பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதும், தங்கள் உயிரை இழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேகதாது அருவியில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது, ஒருவர் அருவியில் தவறி விழ, அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவர்கள் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஷமிர் ரஹ்மான், பவானி சங்கர் என்பது தெரியவந்துள்ளது. #Karnataka #selfieKills
Tags:    

Similar News