செய்திகள்
டிவி விவாதத்தில் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக நெறியாளர் மீது வழக்குப்பதிவு
கேரளாவில் தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக விவாதத்தை நடத்திய நெறியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள மாத்ருபூமி தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் வேனு பாலகிருஷ்ணன், முதல்வர் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் சில கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சி இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வேனு பாலகிருஷ்ணன் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கொல்லம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.