செய்திகள்

மூச்சுத்திணறலால் காதலி மரணம் - இஸ்ரேல் வாலிபர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு

Published On 2018-07-03 09:26 GMT   |   Update On 2018-07-03 09:26 GMT
உடலுறவின் போது இஸ்ரேலை சேர்ந்த பெண் மூச்சுத்திணறலால் உயிரிழந்த வழக்கில் காதலன் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை:

இஸ்ரேலை சேர்ந்த யாகோப் மற்றும் அவரது பெண் தோழியும் கடந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

இதனை விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இஸ்ரேலுக்கு சடலத்தை பெற்று சென்றனர். இந்நிலையில், அந்த பெண்ணின் மரணம் தொடர்பான உடற்கூறாய்வு அறிக்கை மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், உடலுறவின் போது கழுத்து பகுதியில் யாகோப் கூடுதல் அழுத்தம் கொடுத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மும்பை போலீசார், யாகோப் மீது மரணத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யாகோப் தற்போது இஸ்ரேலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News