செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட் தடை

Published On 2018-06-29 16:21 GMT   |   Update On 2018-06-29 16:21 GMT
டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #DelhiHighCourt
புதுடெல்லி:

டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்ககோரி கோரிக்கை வந்தனர். பின்னர் அவர்களது கோரிக்கை நிறைவேறாததையடுத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

பின்னர் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஊதிய உயர்வு வழங்க கோரி டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளது.

மெட்ரோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை டெல்லி அரசு ஏற்கும் என அம்மாநில போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News