செய்திகள்
அரிய வகை வெள்ளை நாகம்.

மூணாறு மறையூர் ஆஸ்பத்திரியில் அரிய வகை வெள்ளை நாக பாம்பு சிக்கியது

Published On 2018-06-01 05:27 GMT   |   Update On 2018-06-01 05:27 GMT
கேரள மாநிலம் மூணாறு மறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அரிய வகை வெள்ளை நாக பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மூணாறு மறையூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று ஆஸ்பத்திரியின் துணிகளை துவைக்க ஊழியர்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றனர். தண்ணீர் தொட்டிக்கு அருகே வெள்ளை நிறத்தில் பாம்பு ஒன்று இருந்தது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறைக்கு விபரம் கூறினர்.

மறையூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூர்த்தி என்பவரின் உதவியுடன் அங்கிருந்த வெள்ளை நிற பாம்பை பிடித்தனர். இந்த வகை வெள்ளை நிற பாம்பு இந்தியாவில் யாரும் பார்த்ததாக தெரியவில்லை.

வனத்துறையினர் இந்த அரிய வகை பாம்பை பாதுகாப்பாக வைக்கலாமா? அல்லது வனப்பகுதியில் பத்திரமாக விடலாமா? என்பது குறித்து உயரதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News