செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். #KupwaraMilitantattack #armypatrollingparty
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அதைத்தொடர்ந்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை. #KupwaraMilitantattack #armypatrollingparty