செய்திகள்

நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் - பயங்கரவாதியை காவலில் எடுத்தது தேசிய புலனாய்வு முகமை

Published On 2018-05-27 01:33 GMT   |   Update On 2018-05-27 01:33 GMT
காஷ்மீரில் 2016-ம் ஆண்டு நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நக்ரோடா ராணுவ முகாம் மீது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 அதிகாரிகள் உள்பட 7 வீரர்கள் பலியானார்கள். இதில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்திய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் போலீசார் வடக்கு காஷ்மீர் லோலாப் பகுதியை சேர்ந்த முனீருல் ஹசன் காத்ரி என்பவரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர் ஜெய்ஷ் இ முகமது என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அந்த தாக்குதலில் தனது பங்கு என்ன? என்றும் பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை காத்ரியை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
Tags:    

Similar News