செய்திகள்
குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்த சரக்கு லாரி - குழந்தை உட்பட 3 பேர் பலி
குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #truckaccident
காந்திநகர்:
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident
குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வல் கிராமம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியே சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள வீட்டில் புகுந்தது.
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த, சந்தோஷ் ரத்வா, அவரது மனைவி கைலாஷ் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை அவினாஷ் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident